அரியானாவில் இன்று மேலும் 1,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


அரியானாவில் இன்று மேலும் 1,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 24 Sep 2020 6:22 PM GMT (Updated: 24 Sep 2020 6:22 PM GMT)

அரியானாவில் இன்று மேலும் 1,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சண்டிகர்,

அரியானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாகவே அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், அரியானா மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அரியானாவில் மேலும் 1,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,554 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 22 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,255 ஆக உயர்ந்துள்ளது. 

மாநிலத்தில் இன்று 2,063 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 98,410 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18,889 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story