மராட்டியத்தில் இன்று மேலும் 16,476 பேருக்கு கொரோனா தொற்று - மாநில சுகாதாரத்துறை


மராட்டியத்தில் இன்று மேலும் 16,476 பேருக்கு கொரோனா தொற்று - மாநில சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 1 Oct 2020 3:23 PM GMT (Updated: 1 Oct 2020 3:23 PM GMT)

மராட்டியத்தில் மேலும் 16,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் மராட்டியம் தான் உள்ளது. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.

இந்த நிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மராட்டியத்தில் மேலும் 16,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,00,922 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 394 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,056 ஆக உயர்ந்துள்ளது. 

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 16,104 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 11,04,426 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் த்ற்போது வரை 2,59,006 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story