ராஜஸ்தானில் இன்று 2,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ராஜஸ்தானில் இன்று 2,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 9 Oct 2020 4:11 PM GMT (Updated: 9 Oct 2020 4:11 PM GMT)

ராஜஸ்தானில் இன்று 2,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு இன்று புதிதாக 2,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜஸ்தானில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,54,785 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு கொரோனா பாதிப்பால் இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ராஜஸ்தானில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,621 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் இதுவரை மொத்தம் 1,31,766 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது 21,398 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story