ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் காயம்


ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் காயம்
x
தினத்தந்தி 19 Oct 2020 6:08 AM GMT (Updated: 19 Oct 2020 6:08 AM GMT)

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதில் சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் கங்கூ அருகே பாதுகாப்புப் படையினர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தார். 

காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

புல்வாமா மாவட்டத்தில் கங்கூவில் காவல்துறையினர் மற்றும் சிஆர்பிஎஃப் கூட்டாக நாகா கட்சி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story