ஆயுத பூஜை: போர் தளவாடங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங் !


ஆயுத பூஜை: போர் தளவாடங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங் !
x
தினத்தந்தி 25 Oct 2020 5:40 AM GMT (Updated: 25 Oct 2020 5:40 AM GMT)

சீனாவுடனான பதற்றம் முடிவுக்கு வர வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.

டார்ஜிலிங்,

நவராத்திரி பண்டிகையின் 9-ஆம் நாளான  இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாகனங்களையும், தொழில் கருவிகளையும் சுத்தம் செய்து பூஜை செய்கின்றனர். . 

அந்த வகையில் பாதுகாப்புத்துறை மந்திரி  ராஜ்நாத்சிங் போர் தளவாடங்களுக்கு இன்று  பூஜை செய்தார். டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா போர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை  செலுத்திய பின், தளவாடங்களுக்கு ராஜ்நாத்சிங் ஆயுத பூஜை செய்தார். 

அதன்பின்னர் பேசிய ராஜ்நாத் சிங், ‘இந்திய-சீனா எல்லை பதற்றம் முடிவுக்கு வர வேண்டும், அமைதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அதேசமயம் நமது நிலத்தில் ஒரு அங்குலம் கூட யாரையும் எடுக்க நமது ராணுவம் அனுமதிக்காது’ என்றார்.

Next Story