பண்டிகைகளை கொண்டாடும் போது வெகு கவனத்தோடு செயல்பட வேண்டும்- பிரதமர் மோடி + "||" + In Mann ki Baat address, PM Modi puts spotlight on importance of humour in trying times
பண்டிகைகளை கொண்டாடும் போது வெகு கவனத்தோடு செயல்பட வேண்டும்- பிரதமர் மோடி
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றி வருகிறார்.
புதுடெல்லி,
கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறுகையில், “விஜயதசமி திருநாளில் அனைவருக்கும் எனது மன மார்ந்த வாழ்த்துக்கள். பண்டிகைகளை கொண்டாடும் போது வெகு கவனத்தோடு செயல்பட வேண்டும். கொரோனா காலத்திலும் காதி துணிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. சந்தைகளில் பொருட்களை வாங்கும் போது உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
எல்லையில் நம்மை பாதுகாக்கும் வீரர்களை நாம் நினைவுகூர வேண்டும். பண்டிகை காலத்தில் வீட்டில் விளக்குகளை அவர்களுக்காக ஏற்ற வேண்டும். அக்.31 ஆம் தேதி நமது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு நாம் மரியாதை செலுத்துவோம்” என்றார்.
தங்கள் நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பும் மிகச்சிறந்த பணியை மோடி அரசு செய்து வருகிறது என பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.