கர்நாடகாவில் நேற்று புதிதாக 3,130 பேருக்கு கொரோனா பாதிப்பு


கர்நாடகாவில் நேற்று புதிதாக 3,130 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 26 Oct 2020 9:37 PM GMT (Updated: 26 Oct 2020 9:37 PM GMT)

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 8,05,947 ஆக உயர்ந்து உள்ளது.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 2 ஆயிரத்து 817 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 3,130 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 5 ஆயிரத்து 947 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 905 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். நேற்று புதிதாக 42 பேர் மட்டுமே இறந்து உள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 947 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 2 நாட்களாக கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து உள்ளது. 

புதிதாக பாகல்கோட்டையில் 51 பேரும், பல்லாரியில் 47 பேரும், பெலகாவியில் 24 பேரும், பெங்களூரு புறநகரில் 87 பேரும், பெங்களூரு நகரில் 1,603 பேரும், பீதரில் 3 பேரும், சாம்ராஜ்நகரில் 26 பேரும், சிக்பள்ளாப்பூரில் 56 பேரும், சிக்கமகளூருவில் 43 பேரும், சித்ரதுர்காவில் 86 பேரும், தட்சிண கன்னடாவில் 153 பேரும், தாவணகெரேயில் 124 பேரும், தார்வாரில் 44 பேரும், கதக்கில் 4 பேரும், ஹாசனில் 98 பேரும், ஹாவேரியில் 39 பேரும், கலபுரகியில் 37 பேரும், குடகில் 39 பேரும், கோலாரில் 75 பேரும், கொப்பலில் 22 பேரும், மண்டியாவில் 56 பேரும், மைசூருவில் 139 பேரும், ராய்ச்சூரில் 37 பேரும், ராமநகரில் 10 பேரும், சிவமொக்காவில் 3 பேரும், துமகூருவில் 57 பேரும், உடுப்பியில் 44 பேரும், உத்தர கன்னடாவில் 51 பேரும், விஜயாப்புராவில் 63 பேரும், யாதகிரியில் 9 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூருவில் 20 பேர், தட்சிண கன்னடாவில் 4 பேர், தார்வாரில் 3 பேர், பல்லாரி, மைசூருவில் தலா 2 பேர், தாவணகெரே, ஹாசன், குடகு, கோலார், மண்டியா, ராமநகர், சிவமொக்கா, துமகூரு, உடுப்பி, உத்தர கன்னடா, யாதகிரியில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். நேற்று 8,715 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதனால் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 19 ஆயிரத்து 558 ஆக உயர்ந்து உள்ளது. 75 ஆயிரத்து 423 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

942 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று 65 ஆயிரத்து 892 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 74 லட்சத்து 47 ஆயிரத்து 493 பேரின் சளி, ரத்தம் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story