பீகார் சட்டசபை தேர்தல்; மாலை 5 மணி நிலவரப்படி 55.22% வாக்குகள் பதிவு


பீகார் சட்டசபை தேர்தல்; மாலை 5 மணி நிலவரப்படி 55.22% வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 7 Nov 2020 1:26 PM GMT (Updated: 7 Nov 2020 1:26 PM GMT)

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 55.22% வாக்குகள் பதிவாகி உள்ளன.

பாட்னா,

பீகார் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடந்து வருகிறது.  முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல் முறையே கடந்த அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 3 ஆகிய நாட்களில் நடந்து முடிந்தது.  3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடந்தது.

78 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த 3-வது கட்ட
தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டன.  71 உறுப்பினர்களுக்கான முதற்கட்ட தேர்தலில் 55.69 சதவீதமும், 94 உறுப்பினர்களுக்கான 2-வது கட்ட தேர்தலில் 53.51 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.82% வாக்குகள் பதிவாகி உள்ளன என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.  இந்த நிலையில், 3 மணி நிலவரப்படி 45.85% வாக்குகள் பதிவாகி இருந்தன.  மாலை 5 மணி நிலவரப்படி 55.22% வாக்குகள் பதிவாகி உள்ளன என ஆணையம் தெரிவித்து உள்ளது.

Next Story