நிதி பகிர்வு அறிக்கையை குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்த 15-வது நிதி ஆணையம்


நிதி பகிர்வு அறிக்கையை குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்த 15-வது நிதி ஆணையம்
x
தினத்தந்தி 9 Nov 2020 9:28 AM GMT (Updated: 9 Nov 2020 9:28 AM GMT)

நாட்டின் 15-வது நிதி ஆணையம் வழங்கிய 2021-22 முதல் 2025-26ம் ஆண்டுக்கான நிதி பகிர்வு அறிக்கையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பெற்று கொண்டார்.

புதுடெல்லி,

நாட்டின் 15-வது நிதி ஆணையம் அதன் தலைவர் என்.கே. சிங் தலைமையில் செயல்பட்டு வருகிறது.  மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே மத்திய வரிகளை பகிர்ந்து அளிப்பது பற்றி இந்த ஆணையம் பரிந்துரை வழங்கும்.

இதன்படி 14வது நிதி ஆணையம், மத்திய வரி வருவாயில் 42 சதவீதம் அளவுக்கு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.  இது அதற்கு முந்தைய நிதி ஆணையத்தின் பரிந்துரையை விட 10 சதவீதம் கூடுதல் ஆகும்.

இந்நிலையில் 15வது நிதி ஆணையம், 2020-21ம் ஆண்டுக்கு மத்திய வரியில் 41 சதவீதம் அளவுக்கு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது.  இதில் குறைக்கப்பட்ட ஒரு சதவீதம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

எனினும், சமீப ஆண்டுகளில் நிதியாணைய பரிந்துரைக்கு குறைவாகவே மாநிலங்களுக்கு நிதி பகிர்வு இருந்து வருகிறது.

இந்த நிலையில், என்.கே. சிங் தலைமையிலான நிதி ஆணையம் தயாரித்த, வருகிற 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் ஆண்டுகளுக்கான அறிக்கையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று பெற்று கொண்டார்.

Next Story