பீகார் சட்டசபை தேர்தல்: 243 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிப்பு


பீகார் சட்டசபை தேர்தல்: 243 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Nov 2020 11:26 PM GMT (Updated: 10 Nov 2020 11:50 PM GMT)

பீகார் சட்டசபை தேர்தலில் 243 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

பாட்னா,

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது.  இவற்றில் ஆட்சி அமைப்பதற்கு 122 உறுப்பினர்கள் தேவையாக உள்ளது.  இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நேற்று காலை தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் 243 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 125 (பா.ஜ.க. -74, ஜே.டி.யு. -43, வி.ஐ.பி. - 4, ஹெச்.ஏ.எம். - 4)

மகாகட்பந்தன் கூட்டணி வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 110 (ஆர்.ஜே.டி. - 75, காங்கிரஸ் -19, இடதுசாரிகள் - 16)

ஏ.ஐ.எம்.ஐ.எம். வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 5

லோக் ஜனசக்தி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை : 1

பி.எஸ்.பி. வெற்றி பெற்றுள்ள தொகுதிகள் எண்ணிக்கை: 1

சுயேச்சை வெற்றி பெற்றுள்ள தொகுதி எண்ணிக்கை: 1

நாடு முழுவதும் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்திய பிகாா் சட்டப் பேரவைத் தோதலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அங்கு மீண்டும் நிதீஷ் குமாா் தலைமையில் ஆட்சி அமையவுள்ளது.

Next Story