கேரளாவில் புதிதாக 4,581- பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் புதிதாக 4,581- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 15 Nov 2020 1:07 PM GMT (Updated: 15 Nov 2020 1:07 PM GMT)

கேரளாவில் புதிதாக 4,581- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளவில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 581- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து 6 ஆயிரத்து 684-பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் 21 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,869- ஆக உள்ளது. 

வார நாட்களில் சராசரியாக 55 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் சூழலில்,ஞாயிற்றுக்கிழமையான இன்று 46 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளே மேற்கொள்ளப்பட்டது.  இதனால் தொற்று பாதிப்பு  குறைவாக பதிவாகியிருப்பதாக தெரிகிறது. மாவட்ட அளவில் அதிகபட்சமாக கோழிக்கோடு (574 பாதிப்பு), மலப்புரம் (558), ஆலப்புழா (496) பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Next Story