மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று 1,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 3 Dec 2020 5:52 PM GMT (Updated: 3 Dec 2020 5:52 PM GMT)

மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று புதிதாக 1,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போபால்,

மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 1,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,10,374 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் இன்று 13 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,300 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 1,93,187 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 13,887 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக, மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story