வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அமைத்த 4 பேர் குழுவிலிருந்து பூபேந்தர் சிங் விலகல்


வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம்  கோர்ட் அமைத்த 4 பேர் குழுவிலிருந்து பூபேந்தர் சிங் விலகல்
x
தினத்தந்தி 14 Jan 2021 10:12 AM GMT (Updated: 14 Jan 2021 10:12 AM GMT)

வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகியுள்ளார்.

புதுடெல்லி:

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள். விவசாயிகள் டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக அறவழியில் போராடி வருகிறார்கள். இதில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்  நடந்து வந்தது. இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை நீங்கள் நிறுத்தி வைக்கிறீர்களா? நாங்கள் நிறுத்தி வைக்கவா?' என மத்திய அரசிடம் கேட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 3 வேளாண் சட்டங்களுக்கும் சுப்ரீம் கோர்ட்  இடைக்காலத் தடை விதித்தது.

 விவசாயிகளுடன் பேசி தீர்வு காண்பதற்கு 4 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவிட்டனர். இந்த குழுவில் பூபிந்தர்சிங் பால், பிரேம்குமார் ஜோஷி, அசோக் குலாரி, அனில் கான்வாட் ஆகியோர் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, விவசாயிகள் தரப்பில் சுப்ரீம்  கோர்ட்  இந்த சட்டங்களை நிறுத்தி வைத்து இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் சட்டங்களை முழுமையாக விலக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே கோரிக்கை.  4 பேர் கொண்ட குழுவை அமைத்து இருப்பதையும் நாங்கள் ஏற்க முடியாது. சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவில் இருப்பவர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்கள்  எங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். 

இந்த நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்  அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகியுள்ளார். அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஒரு விவசாயியாக , ஒரு யூனியன் தலைவராகவும், பண்ணை தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடையே நிலவும் உணர்வுகள் மற்றும் அச்சங்களைக் கருத்தில் கொண்டு, பஞ்சாப் மற்றும் விவசாயிகளின் நலன்களில் சமரசம் ஏற்படாதவாறு எனக்கு வழங்கப்படும் எந்தவொரு பதவியையும் தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். கநான் குழுவிலிருந்து விலகுகிறேன்  நான் எப்போதும் எனது விவசாயிகள் மற்றும் பஞ்சாபுடன் நிற்பேன் என்று அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.


Next Story