இந்தியாவில் இதுவரை 15.37 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவில் இதுவரை 15.37 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு கடந்த 3-ந் தேதி இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 16-ந் தேதி 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடுகிற உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 1 கோடி சுகாதார பணியாளர்களுக்கும், 2 கோடி முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் தடுப்பூசி போட்டவர்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டது. அவை, இன்று மாலை 6 மணி நிலவரப்படி, மொத்தம் 27,776 அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரை 15.37 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story