நாடு முழுவதும் 19.5 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி


நாடு முழுவதும் 19.5 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 25 Jan 2021 3:18 PM GMT (Updated: 25 Jan 2021 3:18 PM GMT)

நாடு முழுவதும் 19.5 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

உலகளவில் ஒப்பிடும்பொழுது கொரோனா பாதிப்புகளில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது.  அதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின்னர் தொற்று குறைந்த பகுதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  பின்னர் கூடுதலாகவும் தளர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், பொதுமக்களிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு கடந்த 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கியுள்ளது.  நாடு முழுவதும் சுகாதார பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதன்பின்னர், 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், பின்னர் பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அரசு தெரிவித்தது.  இதன்படி, கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் 35,785 முகாம்கள் நடத்தப்பட்டு இதுவரை மொத்தம் 19.5 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கும் கூடுதலாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இன்று இரவு 7.10 மணிவரையில், 3 லட்சத்து 34 ஆயிரத்து 679 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.  அவர்களில் 348 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர் எதிர்விளைவுகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது என தெரிவித்து உள்ளது.

Next Story