நாட்டில் பேரிடர் கால சூழலில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தயாரானது: மத்திய நிதி மந்திரி


நாட்டில் பேரிடர் கால சூழலில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தயாரானது:  மத்திய நிதி மந்திரி
x
தினத்தந்தி 1 Feb 2021 5:50 AM GMT (Updated: 1 Feb 2021 5:50 AM GMT)

நாட்டில் பேரிடர் கால சூழலில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தயாரானது என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசி வருகிறார். இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது.

பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு டெல்லியில் மத்திய மந்திரிசபை கூட்டம் இன்று காலை நடந்தது.  இதில், நாடாளுமன்றத்தில் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.  இதனை தொடர்ந்து மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

அவர் பேசும்பொழுது, இதுவரை இல்லாத வகையில், ஒரு நாட்டை அல்லது நாட்டின் ஒரு பகுதியை பேரிடர் தாக்கிய காலத்தில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தயாராகி உள்ளது.  ஆனால், கொரோனா பாதிப்புகளில் இருந்து நாம் போராடி மீண்டு வந்துள்ளோம் என்று மத்திய நிதி மந்திரி கூறியுள்ளார்.

Next Story