ஒரே கழிவறையில் சிக்கி கொண்ட நாய் - சிறுத்தை 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு


ஒரே கழிவறையில் சிக்கி கொண்ட நாய் - சிறுத்தை 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு
x
தினத்தந்தி 4 Feb 2021 5:15 PM IST (Updated: 4 Feb 2021 5:17 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவின் பிலினேல் கிராமத்தில் நாயை துரத்தி சென்ற சிறுத்தை நாயுடன் சேர்ந்து 7 மணி நேரமாக கழிவறைக்குள் சிக்கி கொண்டது.

பெங்களூரு:

கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டத்தின்  பிலினேல் கிராமத்தில்  சிறுத்தை ஒன்று  நாயை துரத்தி உள்ளது. நாய்  ரெகப்பா  என்பவரின் வீட்டின் கழிவறைக்குள் புகுந்தது தொடர்ந்து சிறுத்தையும் கழிறைக்குள் புகுந்து.

சிறுத்தை கழிவறைக்குள் நுழைந்ததை பார்த்ததும் அந்த வீட்டு பெண்மணி  உடனடியாக கழிவறையின் கதவைப் பூட்டி பக்கத்து  வீட்டுகாரர்களை அழைத்து உள்ளார்.

உடனடியாக போலீஸ் அதிகாரிகளுக்கும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. கழிவறையில் நாயும், சிறுத்தையும் சிக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

இதுகுறித்து வனத்துறை சரகர் கரிகலன் கூறியதாவது:-

‘ரெகப்பா என்பவர் வீட்டின் கழிவறையில் நாயும், சிறுத்தையும் இருப்பதாகவும், அதனை பூட்டி வைத்திருப்பதாகவும் வனத்துறை தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறை ஊழியர்கள் சென்று சிறுத்தை மற்றும் நாயை வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். கழிப்பறைக்கு வெளியே ஒரு கூண்டு வைக்கப்பட்டு, அதனை சுற்றி ஒரு வலையும் அமைக்கப்பட்டது.

நீண்ட போராட்டத்திற்கு பின் சிறுத்தை வெளியே வந்தது. நாங்கள் வைத்திருந்த கூண்டுக்குள் சிக்கியது. சிறுத்தை வெளியே வந்த சில நிமிடங்களில் நாயும் வெளியே வந்தது. கிட்டதிட்ட 7 மணி நேர போராட்டத்திற்கு பின் நாயையும், சிறுத்தையையும் வெளியேற்றினோம். 

வனப்பகுதியில் சுற்றித் திரிந்த நாயை துரத்திக் கொண்டு குடியிருப்பு பகுதிக்கு சிறுத்தை வந்துள்ளது. ஒருகட்டத்தில் நாயானது கழிவறைக்குள் நுழைந்ததால், சிறுத்தையும் தொடர்ந்து சென்று நுழைந்து உள்ளது. 

இதில் வேடிக்கை என்னவென்றால் 7 மணி நேரமாக ஒரே அறைக்குள் இருந்த சிறுத்தை, அந்த நாயை கொல்லவில்லை என்பதுதான். மீட்பு நடவடிக்கையின் போதும் எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மீட்கப்பட்ட சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்பட்டது என கூறினார்.
1 More update

Next Story