கொப்பல் அருகே ஓடும் ஆம்புலன்சில் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்


கொப்பல் அருகே ஓடும் ஆம்புலன்சில் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பெண்
x
தினத்தந்தி 31 March 2021 2:19 AM IST (Updated: 31 March 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ஆம்புலன்சில் இரட்டை குழந்தைகளை பெண் ஒருவர் பெற்றெடுத்தார்.

கொப்பல்: கொப்பல் மாவட்டம் குஷ்டகி தாலுகா ஷாகபுரா கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பா(வயது 38). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி உண்டானது. இதனால் புஷ்பாவை அவரது குடும்பத்தினர் மீட்டு பிரசவத்திற்காக ஆம்புலன்சில் ஏற்றி குஷ்டகி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரசவ வலியால் புஷ்பா அலறி துடித்தார். 

இதனால் செய்வது அறியாது அவரது குடும்பத்தினர் தவித்தனர். இந்த சந்தர்ப்பத்தில் ஆம்புலன்சில் இருந்த மருத்துவ ஊழியர் பீமப்பா, புஷ்பாவுக்கு பிரசவம் பார்த்தார். இதில் ஒரு ஆண், ஒரு பெண் என புஷ்பாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. பின்னர் புஷ்பாவும், அவரது குழந்தைகளும் குஷ்டகி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தாயும், சேய்களும் நலமாக உள்ளனர். ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பீமப்பாவை, மருத்துவமனை ஊழியர்கள், புஷ்பாவின் குடும்பத்தினர் வெகுவாக பாராட்டினார்கள். 

Next Story