தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு + "||" + Classes 1-9 canceled in Rajasthan; Government Notice

ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு

ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு
ராஜஸ்தானில் 1 முதல் 9 வரையிலான வகுப்புகள் தற்காலிக ரத்து செய்யப்படுகின்றன என மாநில அரசு அறிவித்து உள்ளது.
ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  இதனை முன்னிட்டு தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டு உள்ளது.

இதன்படி, ராஜஸ்தானுக்குள் வேறு மாநிலங்களில் இருந்து நுழைய மற்றும் வெளியே பயணம் செய்பவர்களுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  இதேபோன்று 1 முதல் 9 வரையிலான வகுப்புகள் தற்காலிக ரத்து செய்யப்படுகின்றன.
இரவு ஊரடங்கு உத்தரவுகளை மாவட்ட மாஜிஸ்திரேட் அமல்படுத்தலாம்.  ஆனால், இரவு 8 மணிக்கு முன்பும் மற்றும் காலை 6 மணிக்கு பின்பும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது பற்றி அரசின் அனுமதியை பெற வேண்டும்.

உணவு விடுதியில் இருந்து உணவை வாங்கி செல்லலாம்.  டெலிவரி சேவைக்கும் அனுமதி அளிக்கப்படும்.  இவை தவிர்த்து உணவு விடுதிகள் இரவு ஊரடங்குக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.

திருமண நிகழ்ச்சிகளுக்கு 100 பேருக்கு கூடுதலாக அனுமதி கிடையாது.  திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டு இருக்கும் என ராஜஸ்தான் அரசு தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா ரத்து
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக இந்துசமய அறநிலையத்துறையினர் அறிவித்துள்ளனர்.
2. கேரள சட்டசபை தேர்தல்; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் பேரணி ரத்து
கேரள சட்டசபை தேர்தல் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் பேரணி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
3. நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா ரத்து
சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்தாண்டு நாட்டியாஞ்சலி விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொது தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர்.
4. ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எம்.டெக் படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட எம்.டெக் படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
5. குடவாசல், மன்னார்குடி பகுதியில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
குடவாசல், மன்னார்குடி பகுதியில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.