டெல்லியில் மேலும் 25,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 412 பேர் பலி


டெல்லியில் மேலும் 25,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 412 பேர் பலி
x
தினத்தந்தி 1 May 2021 7:05 PM GMT (Updated: 1 May 2021 7:05 PM GMT)

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரேநாளில் 25 ஆயிரத்து 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா தனது கோர முகத்தை காட்டி வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சமடைந்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய (மே 1) கொரோனா பாதிப்பு விவரத்தை டெல்லி அரசு வெளியிட்டது.

அதன்படி, டெல்லியில் நேற்று ஒரேநாளில் 25 ஆயிரத்து 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 74 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 97 ஆயிரத்து 747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து டெல்லியில் மேலும் 27 ஆயிரத்து 421 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 61 ஆயிரத்து 246 ஆக அதிகரித்துள்ளது. 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக மேலும் 412 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தலைநகர் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது.

Next Story