அசாம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்


அசாம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 3 May 2021 2:03 PM GMT (Updated: 3 May 2021 2:03 PM GMT)

அசாம் மாநிலத்தில் இன்று மாலை 6.13 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் இன்று மாலை 6.13 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அசாம் மாநிலம் சோனித்பூரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    

ரிக்டர் அளவில் 3.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த லேசான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்த போதும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக, கடந்த 28-ம் தேதியும் இதே சோனித்பூரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story