தேசிய செய்திகள்

மேற்கு வங்க முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி + "||" + Mamata Banerjee takes oath as the Chief Minister of #WestBengal for a third consecutive term. She was administered the oath by Governor Jagdeep Dhankhar.

மேற்கு வங்க முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி 3-வது முறையாக பதவியேற்றார்.
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிரடி வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார், மம்தா பானர்ஜி.

மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. 66 வயதாகும் மம்தா, காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் களத்தில் சுழன்று, வரலாற்று வெற்றியை சாதித்திருக்கிறார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா, தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாக இன்று  காலை பதவியேற்றார். 

 கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 


தொடர்புடைய செய்திகள்

1. மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராமில் மீண்டும் வாக்குகளை எண்ண முடியாது; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2. மேற்கு வங்காளம்: திரிணாமூல் காங். அதிக இடங்களில் முன்னிலை, மம்தா பின்னடைவு
மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.
3. கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கண்டனம்: சென்னை ஐகோர்ட்டு கருத்துக்கு மம்தா பானர்ஜி வரவேற்பு; மத்திய படைகளை திரும்பப்பெறவும் வலியுறுத்தல்
கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை ஐகோர்ட்டின் கருத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார்.
4. கொரோனா பாதிப்பு:பிரதமருடனான முதல் மந்திரிகள் கூட்டத்தை புறக்கணித்த மம்தா பானர்ஜி
அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு குறித்து பிரதமருடனான முதல் மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணித்தார்.
5. மே.வங்காளத்திற்கு வந்துகொண்டிருந்த ஆக்சிஜன் விநியோகம் உ.பிரதேசத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது - மம்தா குற்றச்சாட்டு
மேற்குவங்காளத்திற்கு வந்துகொண்டிருந்த ஆக்சிஜன் விநியோகம் உத்தரபிரதேசத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.