தேசிய செய்திகள்

கேரளாவில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு: முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு + "||" + Full curfew in Kerala from 8th to 16th: Announcement by First Minister Binarayi Vijayan

கேரளாவில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு: முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு

கேரளாவில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு: முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு
கேரளாவில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம், 

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 4 லட்சத்தை தாண்டி பதிவாகி உள்ளது. 

நாள்தோறும் கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதனிடையே இன்று முதல் தமிழகத்தில் வரும் 20-ஆம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கேரளாவில் வரும் 8-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.  

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து நாளை மறுநாள் காலை 6 மணி முதல் மே 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட உள்ளதாக கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் ஆகிய பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி - தொல். திருமாவளவன்
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளம் ஆகிய பெரிய மாநிலங்களில் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளதாக தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2. கேரளா சட்டமன்ற தேர்தல்: பாலக்காடு தொகுதியில் மெட்ரோமேன் ஸ்ரீதரன் முன்னிலை
கேரள சட்டமன்ற தேர்தலில் சிபிஎம் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
3. பொதுமுடக்கம் போன்ற கட்டுப்பாடுகளால் முடங்கியது, கேரளா; கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை
கேரளாவில் பொதுமுடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
4. கேரளாவில் பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை
கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா 2-வது அலை காரணமாக அங்கு நேற்று மட்டும் 13 ஆயிரத்து 644 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
5. கொரோனா கட்டுப்பாடுகளுடன் கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு தொடங்கியது
கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது.