டெல்லியில் மேலும் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு - 20 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்


டெல்லியில் மேலும் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு - 20 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
x
தினத்தந்தி 6 May 2021 9:44 AM GMT (Updated: 6 May 2021 9:44 AM GMT)

தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு மெல்லமெல்ல குறையத்தொடங்கியுள்ளது. அந்த வகையில், இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை டெல்லி அரசு வெளியிட்டது.

அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 19 ஆயிரத்து 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 73 ஆயிரத்து 35 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 90 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து மேலும் 20 ஆயிரத்து 28 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 64 ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது. 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 335 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தலைநகர் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது.

Next Story