கொரோனா பற்றிய தகவல்களை பிரசார சாதனமாக பயன்படுத்துவது ஏன்? - மத்திய அரசுக்கு பிரியங்கா கேள்வி

கொரோனா பற்றிய தகவல்களை பிரசார சாதனமாக பயன்படுத்துவது ஏன் என்று மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ மற்றும் ‘பேஸ்புக்’ பக்கங்களில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கூயிருப்பதாவது:-
கொரோனா தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிப்பதுதான் கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற ஒரே வழி என்று உலகம் முழுவதும் உள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மத்திய அரசு அப்படி செய்யாதது ஏன்?
மத்திய அரசு வெளியிடும் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களுக்கும், சுடுகாடுகளில் இருந்து பெறப்பட்ட அதிகாரபூர்வமற்ற புள்ளிவிவரங்களுக்கும் இடையே நிறைய வேறுபாடு காணப்படுவது ஏன்? கொரோனா தொடர்பான தகவல்களை தொற்றை கட்டுப்படுத்த பயன்படுத்துவதற்கு பதிலாக, தனது பிரசார சாதனமாக மத்திய அரசு பயன்படுத்துவது ஏன்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story