ஜார்கண்டில் ஜூன் 16 வரை ஊரடங்கு நீட்டிப்பு


ஜார்கண்டில் ஜூன் 16 வரை ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 10 Jun 2021 1:21 AM IST (Updated: 10 Jun 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

ஜார்கண்டில் ஜூன் 16 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராஞ்சி, 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு ஜூன் 16-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அங்கு ஏப்ரல் 22-ந்தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு. ஒவ்வொரு வாரமும் புதிய நெறிமுறைகளும், ஊரடங்கு நீட்டிப்பும் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது 5-வது முறையாக மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை குழுவினருடன், முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், ஆலோசனை நடத்திய பின்பு, இது பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அங்கு 23 மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு காலை 6 மணி முதல் 4 மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிப்பு உடைய ஜாம்செட்பூரிலும், பகல் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அங்கு சனிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு பின்பற்றப்படுகிறது.

ஜார்கண்டில் நேற்று புதிதாக 603 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மொத்தம் 5 ஆயிரத்து 99 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story