கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 13 Jun 2021 3:22 PM GMT (Updated: 13 Jun 2021 3:22 PM GMT)

கர்நாடகாவில் இன்று மேலும் 7,810 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை முதலில் அதிகரித்து வந்த நிலையில் தற்போது கர்நாடக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 7,810 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,65,134 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 125 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,913 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 18,648 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,51,365 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1,80,835 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story