புதுச்சேரியில் ஜூன் 16 முதல் அலுவலகங்களில் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

புதுச்சேரியில் ஜூன் 16 முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. புதுவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகளான மளிகை, காய்கறி, பழங்கள், மருந்தகம், இறைச்சி கடைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
இவை தவிர அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக புதுவையில் தொற்று பரவல் படிப்படியாக குறைந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 8ந் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டுளது.
இந்தநிலையில் புதுச்சேரியில் ஜூன் 16 முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story