சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது? இன்னும் முடிவு செய்யப்படவில்லை


சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது? இன்னும் முடிவு செய்யப்படவில்லை
x
தினத்தந்தி 14 Jun 2021 8:26 PM GMT (Updated: 14 Jun 2021 8:26 PM GMT)

கொரோனா 2-வது அலையின் தீவிரம் காரணமாக, மாணவர்கள் நலன் கருதி சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 1-ந் தேதி ரத்து செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சரியான மதிப்பீட்டு முறையை உருவாக்க மத்திய அரசுக்கு 2 வார காலஅவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு 3-ந் தேதி உத்தரவிட்டது.இந்நிலையில், 12-ம் வகுப்பு 
மாணவர்களுக்கு எந்த வழிமுறையில் மதிப்பீடு வழங்கலாம் என்று பரிந்துரைப்பதற்காக ஒரு 13 பேர் குழுவை சி.பி.எஸ்.இ. அமைத்தது. அந்தக் குழு தனது பரிந்துரைகளை நேற்று (14-ந் தேதி) சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு சமர்ப்பிக்காத நிலையில், அதற்கு மேலும் சில நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது. சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு சரியான, நியாயமான மதிப்பீட்டு முறையை உருவாக்குவதற்கான விரிவான விவாதங்கள் நடைபெற்றன. அதன் அடிப்படையிலான இறுதி பரிந்துரைகள், சி.பி.எஸ்.இ.யிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று குறிப்பிட்ட குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர், மாணவர்கள் 10, 11-ம் வகுப்புகளில் ெபற்ற மதிப்பெண்கள், 12-ம் வகுப்பில் பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வுகள், உள் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பீடு வழங்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் இறுதி முடிவு இனிமேல்தான் எடுக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் கூறின.

Next Story