மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று உயர்வு


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று உயர்வு
x
தினத்தந்தி 20 Jun 2021 4:01 PM GMT (Updated: 20 Jun 2021 4:01 PM GMT)

தலைநகர் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 733- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு இன்று சற்று உயர்ந்துள்ளது. அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, மரட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9,361- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 190- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9,101- பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,719,457- ஆக உயர்ந்துள்ளது.  

தொற்று பாதிப்பை கண்டறிய இன்று  201,938-மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  அம்மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மாதிரிகள் எண்ணிக்கை 39,514,858- ஆக உள்ளது.

தலைநகர் மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 733- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Next Story