ஜார்க்கண்டில் கடந்த 24 மணி நேரத்தில் 85 பேருக்கு கொரோனா


ஜார்க்கண்டில் கடந்த 24 மணி நேரத்தில் 85 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Jun 2021 9:24 PM GMT (Updated: 30 Jun 2021 9:24 PM GMT)

ஜார்க்கண்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 85- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 85- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 120 பேர் குணம் அடைந்துள்ளனர்.  

ஜார்க்கண்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 45 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அங்கு தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 914- ஆக உள்ளது.  கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,113- ஆக உயர்ந்துள்ளது.  

முன்னதாக, கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளவும் ஜார்க்கண்ட் அரசு தயாராக உள்ளது  என மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தெரிவித்து இருந்தார். 


Next Story