பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 4 பேர் கைது

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாராமுல்லா,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாராமுல்லா மாவட்டத்தில் உரி பகுதியில் இருந்து 4 பேர் வெளியேறி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று 4 பேரையும் கைது செய்தனர். இதில், கோஹல்லான் பிரிவை சேர்ந்த பர்வாயிஜ் அகமது ஹஜாம் என்பவர் வழிகாட்டியாக இருந்து மற்ற 3 பேருக்கு உதவியுள்ளார்.
முகமது சபி ஹஜாம், ரியாஸ் அகமது பட் மற்றும் யாசிர் பட் ஆகிய 3 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், டார்ச் லைட் மற்றும் பிற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story