கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 14,539- பேருக்கு தொற்று


கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- ஒரே நாளில் 14,539- பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 13 July 2021 7:42 PM IST (Updated: 13 July 2021 7:42 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,539- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா வைரசின் 2-வது அலை கட்டுக்குள் வர மறுக்கிறது.  நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தற்போது கேரளாதான் உள்ளது. கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன் விவரம் வருமாறு: - கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,539- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 39 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 10.46- சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து இன்று 10,331- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 174- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 124- பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story