மாநிலங்களிடம் 1.92 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு - மத்திய அரசு தகவல்

இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இதில் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த 21-ந்தேதி அமல்படுத்திய மத்திய அரசு, இந்த பணிகளை மேலும் முடுக்கி விட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களிடம் 1.92 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,
காலை 8 மணி வரையிலான நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 40 கோடியே 31 லட்சத்து 74 ஆயிரத்து 380 கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதில், 38,39,02,614 கொரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது.
தற்போது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் 1,92,71,766 தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. மேலும், 83,85,790 தடுப்பூசிகள் இன்னும் விநியோகிக்கப்படவுள்ளன.மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 34,97,058 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story