பீகாரில் பிரதமர் மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்த சிற்பி...!


பீகாரில் பிரதமர் மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்த சிற்பி...!
x
தினத்தந்தி 16 July 2021 8:51 AM GMT (Updated: 16 July 2021 8:51 AM GMT)

பீகார் மாநிலத்தை சேர்ந்த சிற்பி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்துள்ளார்.

பாட்னா,

பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஒரு சிற்பி. இவர் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை போல உண்டியல் செய்துள்ளார். 

இதுகுறித்து சிற்பி பிரகாஷ் கூறுகையில் , பிரதமர் மோடி நாட்டை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக உணர்ந்தேன். எனவே பணத்தை மிச்சப்படுத்த இதை செய்ய முடிவு செய்தேன். மேலும் இந்த உண்டியலில் சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள பணத்தை நாணயமாக அல்லது தாளாக சேமிக்க முடியும் இந்த உண்டியல் செய்ய ஒரு மாதம் பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதை தயாரித்த உடன் நான் அதை சந்தையில் விற்க ஆரம்பித்தேன். உலகை சிறந்தவரான நமது பிரதமரை பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கவும் இது பயன்படுத்தப்படலாம் என்றும், எனக்கு இதுவரை எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை என்றும் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அந்த உண்டியலில் உலகிலேயே தலை சிறந்த பிரதமர் என்ற வாசகத்தை எழுதியுள்ளார். 

Next Story