மேகதாதுவில் புதிய அணை கட்டுவது உறுதி டெல்லியில் எடியூரப்பா பேட்டி


மேகதாதுவில் புதிய அணை கட்டுவது உறுதி டெல்லியில் எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 17 July 2021 7:34 AM IST (Updated: 17 July 2021 7:34 AM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் 100 சதவீதம் புதிய அணை கட்டுவது உறுதி என டெல்லியில் எடியூரப்பா கூறினார்.


புதுடெல்லி, 

தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி குழு டெல்லியில் நேற்று மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று கோரி கடிதம் வழங்கியது.

இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று மதியம் பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவர் கர்நாடக பவனில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி தெரிவித்தேன். ஆனால் அந்த மாநிலம் மேகதாது திட்டத்தை எதிர்ப்பதில் பிடிவாதமாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்ட சட்டத்தில் சாதகமான அம்சங்கள் உள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்த நாங்கள் சக்தியைமீறி முயற்சி செய்கிறோம். அதனால் மேகதாதுவில் 100 சதவீதம் புதிய அணை கட்டுவது உறுதி. கர்நாடக மக்களுக்கு இந்த உறுதிமொழியை அளிக்கிறேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story