கேரளாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு குறைவு
கேரளாவில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 12,818 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 32,18,015 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் 12.38 சதவீதமாக உள்ளது.
மாநில முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 122 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,793 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 1லட்சத்து 20 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story