காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஒருவர் பலி; போலீசார் தேடுதல் வேட்டை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியான நிலையில் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில் லர்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் திடீரென பொதுமக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த ஒருவர் பின்னர் பலியாகி உள்ளார். அவர் ஜாவீத் ஆஹ் மாலிக் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவரது வீட்டுக்கு அருகே வைத்து பயங்கரவாதிகள் அவரை சுட்டு கொன்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் தீவிரமுடன் ஈடுபட்டு உள்ளனர் என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story