அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: கேரளாவில் சனி -ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு


அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: கேரளாவில்  சனி -ஞாயிறு 2  நாட்கள்  முழு ஊரடங்கு
x
தினத்தந்தி 29 July 2021 5:57 AM GMT (Updated: 29 July 2021 5:59 AM GMT)

கேரள அரசு கொரோனா வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது; சனி -ஞாயிறு 2 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்புகிறது. கேரளாவில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டிலேயே கேரளாவில் கொரோனா பாதிப்பு என்பது மீண்டும் அதிகரித்து வருவது மூன்றாம் அலைக்கான முன்னோட்டம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை உடனடியாக தடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கேரள அரசு இந்த வார இறுதிநாட்களான ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய 2 தினங்களுக்கு முழு ஊரடங்கு  அறிவித்துள்ளது. 

தற்போது நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கமே அமலில் உள்ளது. கேரளாவில் மூன்றாவது முறையாக மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது.

கேரள அரசு கொரோனா  வழிகாட்டுதல்களை திருத்தியுள்ளது, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (நீட்) அனுமதியை  அடுத்து இப்போது அனுமதிக்கப்பட்ட நாட்களில் புகைப்பட ஸ்டுடியோக்களை திறக்க அனுமதிக்கிறது.

 விதைகள் மற்றும் உரங்களை விற்கும் கடைகளும் சமீபத்திய அரசாங்க உத்தரவில் அத்தியாவசிய சேவைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரத் துறையின் விலைப் பிரிவும் ஒரு அத்தியாவசிய வகையை உள்ளடக்கியது, இதனால் அத்தகைய கடைகள் தேவையான ஊழியர்களுடன் எல்லா நாட்களிலும் திறக்கப்படலாம்.

Next Story