அசாமில் மேலும் 1,182-பேருக்கு கொரோனா


அசாமில் மேலும் 1,182-பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Aug 2021 5:30 PM GMT (Updated: 3 Aug 2021 5:30 PM GMT)

அசாமில் மேலும் 1,182- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

அசாமில் மேலும் 1,182- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,158- குணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் 11,093 பேர் அசாமில் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,307- ஆக உயர்ந்துள்ளது.

தெலுங்கானாவில் இன்று 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து  இன்று 647- பேர் குணம் அடைந்துள்ளனர். தெலுங்கானாவில் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 98.05 சதவிகிதமாக உள்ளது. 

Next Story