இந்தியாவில் மொத்தம் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 50 கோடி: மத்திய அரசு


இந்தியாவில் மொத்தம் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 50 கோடி:  மத்திய அரசு
x
தினத்தந்தி 6 Aug 2021 5:34 PM GMT (Updated: 6 Aug 2021 5:34 PM GMT)

இந்தியாவில் மொத்தம் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 50 கோடி மைல்கல்லை கடந்துள்ளது என மத்திய அரசு அறிவித்து உள்ளது.



புதுடெல்லி,

நாட்டில் 50 கோடிக்கும் கூடுதலானோருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 50 கோடி என்ற மைல்கல்லை (50,03,48,866) கடந்துள்ளது

அந்த அறிக்கையின்படி, 43.29 லட்சத்திற்கும் கூடுதலான (43,29,673) தடுப்பூசிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.  18-44 வயது பிரிவில் இதுவரை 17,23,20,394 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 1,12,56,317 பயனாளிகள் தங்களது 2வது தவணை தடுப்பூசியையும் இன்று பெற்றனர்.

மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மராட்டியம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் ஒரு கோடிக்கும் கூடுதலான தடுப்பூசிகளை 18-44 வயது பிரிவினருக்கு இதுவரை செலுத்தியுள்ளன.

நாட்டில் இதுவரை மொத்தம் 38,94,75,520 பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசியும், 11,08,73,346 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story