திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 15 லட்சம்


திருப்பதி ஏழுமலையான் கோவில் ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.2 கோடியே 15 லட்சம்
x
தினத்தந்தி 9 Aug 2021 12:25 PM GMT (Updated: 9 Aug 2021 12:25 PM GMT)

திருப்பதி கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.2 கோடியே 15 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 21 ஆயிரத்து 394 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 11 ஆயிரத்து 82 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 15 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story