ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரை


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நாட்டு மக்களுக்கு உரை
x
தினத்தந்தி 14 Aug 2021 8:25 AM GMT (Updated: 14 Aug 2021 8:25 AM GMT)

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றவுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றவுள்ளார். அனைத்து அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் அலைவரிசைகளில் மாலை 7 மணி முதல் முதலில் இந்தியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் அவரது உரை ஒளிபரப்படும். 

இந்தி மற்றும் ஆங்கில ஒளிபரப்பை தொடர்ந்து, தூர்தர்ஷனின் பிராந்திய மொழி அலைவரிசைகளில் அந்தந்த மொழிகளில் குடியரசுத் தலைவரின் உரை ஒளிபரப்பாகும். பிராந்திய மொழி உரையை தனது பிராந்திய அலைவரிசைகளில் இரவு 9.30 மணிக்கு அகில இந்திய வானொலி ஒலிபரப்ப உள்ளது.

அதேபோல், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 14-ம் தேதி(இன்று) தேநீர் விருந்து அளிக்க உள்ளார். புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதிபவனில் இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


Next Story