ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வருவோருக்கு மின்னணு விசா முறை அறிமுகம்- மத்திய அரசு

இந்தியாவினுள் நுழைவோருக்கு விரைவாக விசா வழங்கும் வகையில் மின்னணு விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காபூல்,
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் போய்விட்டது' என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின.
அந்த வகையில், இந்தியாவும் அங்குள்ள நமது நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நேற்று முன் தினம் 129-பேருடன் ஒரு விமானம் இந்தியா வந்தது. நேற்று காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட களேபரத்தால் விமான நிலையம் மூடப்பட்டது. இதனால், விமானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை காபூல் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.
இதையடுத்து, 120 இந்திய அதிகாரிகளுடன் காபூலில் இருந்து இந்தியாவுக்கு 2-வது விமானம் (சி 17 ) புறப்பட்டுள்ளது. இதனிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைனில் விசா பெறலாம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவினுள் நுழைவோருக்கு விரைவாக விசா வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய தூதர், அதிகாரிகளை இந்தியாவுக்கு திரும்ப அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story