கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் சிறுவர்களுக்கு எதிராக 350-க்கும் மேற்பட்ட குற்றங்கள்


கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் சிறுவர்களுக்கு எதிராக 350-க்கும் மேற்பட்ட குற்றங்கள்
x

கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் சிறுவர்களுக்கு எதிராக 350-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்து உள்ளன.

புதுடெல்லி,

‘குழந்தைகளுக்கான உரிமை மற்றும் நீங்கள்’ என்ற அமைப்பு, இந்தியாவில் கடந்த ஆண்டில் சிறுவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் ஆய்வு செய்துள்ளது. இதில், கடந்த ஆண்டு 1,28,531 குற்றங்கள் சிறுவர்களுக்கு எதிராக பதிவாகி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அந்தவகையில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 350-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்து உள்ளன. 

கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்த காலகட்டத்திலும் இந்த குற்றங்கள் அதிக அளவில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தை திருமணம் 50 சதவீதம் அளவுக்கும், ஆன்லைன் அத்துமீறல் வழக்குகள் 400 சதவீதம் அளவுக்கும் அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. 

மாநிலங்கள் நிலவரத்தை பொறுத்தவரை மத்திய பிரதேசம் (13.2 சதவீதம்), உத்தரபிரதேசம் (11.8 சதவீதம்), மராட்டியம் (11.1 சதவீதம்), மேற்கு வங்காளம் (7.9 சதவீதம்), பீகார் (5.1 சதவீதம்) ஆகிய 5 மாநிலங்கள் மட்டுமே மொத்த வழக்குகளில் சுமார் 50 சதவீதத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story