டெல்லியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று


டெல்லியில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 22 Oct 2021 4:03 PM GMT (Updated: 22 Oct 2021 4:03 PM GMT)

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 38- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்ற்று பாதிப்பால் மேலும்  8 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 39 ஆயிரத்து 526- ஆக உயர்ந்துள்ளது. 

 அதேபோல், குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 14 ஆயிரத்து 095- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,091- ஆக உள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 340- ஆக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 55,909- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் 0.01 சதவிகிதமாக உள்ளது. 

Next Story