இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,488- பேருக்கு கொரோனா தொற்று


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,488- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 21 Nov 2021 4:39 AM GMT (Updated: 21 Nov 2021 4:39 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,488- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் செல்கிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து சரிவு அடைந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,488- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 12,329- பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 313- பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,45,10,413 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 714- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,39,22,037  - ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,65,662 ஆக உயர்ந்துள்ளது. 

நாட்டில் நேற்று ஒருநாளில் மட்டும் 6.27.277 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 1,16,50,55,210 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

Next Story