காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி: டெல்லியில் பள்ளிகள் மூடல்


காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி: டெல்லியில் பள்ளிகள் மூடல்
x
தினத்தந்தி 2 Dec 2021 7:58 PM GMT (Updated: 2 Dec 2021 7:58 PM GMT)

காற்று மாசு அதிகரிப்பு எதிரொலியாக டெல்லியில் அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில், காற்று மாசு பிரச்சினை நீடித்து வருகிறது. காற்று மாசு காரணமாக கடந்த மாதம் 13-ந் தேதியில் இருந்து மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள், கடந்த 29-ந் தேதிதான் மீண்டும் செயல்பட தொடங்கின. இந்தநிலையில், காற்று மாசு அதிகரித்ததால், டெல்லியில் அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் கூறியதாவது:-

காற்றின் தரம் அதிகரிக்கும் என்ற கணிப்பில் பள்ளிகளை மீண்டும் திறந்தோம். ஆனால், இப்போது காற்றின் தரம் மிகவும் மோசமாகி விட்டது. எனவே, மறுஉத்தரவு வரும்வரை அனைத்து பள்ளிகளும் 3-ந் தேதி (இன்று) முதல் மூடப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

நேரடி வகுப்புகளுக்கு பதிலாக, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற உள்ளன. அதே சமயத்தில், பொது தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று டெல்லி கல்வி மந்திரி மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

Next Story