திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க நடந்து சென்றவர்கள் மீது மோதிய பஸ் - ஒருவர் பலி


திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க நடந்து சென்றவர்கள் மீது மோதிய பஸ் - ஒருவர் பலி
x
தினத்தந்தி 4 Dec 2021 6:05 AM GMT (Updated: 4 Dec 2021 6:05 AM GMT)

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கூட்டமாக சென்றவர்கள் மீது பஸ் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

போபால்,

மத்தியபிரதேசத்தில் பிட்டூல் மாவட்டம் ஹெதி சவாலி ஹிர் கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சாலையோரம் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது, பகிந்திஹி நகரில் இருந்து பிட்டூல் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடத்து சென்றவர்கள் மீது மோதியது. 

இந்த விபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க நடத்து சென்ற 45 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். 

Next Story