மராட்டியத்தில் 136 போலீருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மராட்டியத்தில் ஒரே நாளில் 136 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 43 ஆயிரத்து 211 பேருக்கு புதிதாக இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 33 ஆயிரத்து 356 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 67 லட்சத்து 17 ஆயிரத்து 125 ஆக அதிகரித்துள்ளது.
2 லட்சத்து 61 ஆயிரத்து 658 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது.
மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 136 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 1,253 போலீசார் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 126 போலீசார் உயிரிழந்து உள்ளனர் என மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story